search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்கள்"

    புதிய கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தக்கலை :

    தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதநல்லூர் பேரூராட்சி யில் அமைந்துள்ளது கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். இந்த கட்டிடம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் பாளங்கள் கழன்று விழுந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் அங்கு தரை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் நோயாளிகள் சாக்கு பைகளை தரையில் விரித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் மருத்துவ பணிகள் செய்ய முடியாமல் பக்கத்தில் உள்ள மகப்பேறு நடக்கும் கட்டிடத்தில் வைத்து வெளி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவ உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கும் போதிய கட்டிட இட வசதி இல்லை. இதனால் புறநோயாளிகள் அலைக்கழிக்கபடுகிறார்கள். இந்த கட்டிடம் பழமையாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்துடன் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து போய் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனை கட்டிடத்தை இடித்து மாற்றி புதிய கட்டிடம் கட்ட முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிதியோன் ராஜ், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார் ஆகிய பகுதிகளில் இருந்து மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆனால் இப்போது களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இது குறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    தற்போது மீண்டும் களியக்காவிளை சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, திருத்தோபுரம், குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல் போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான வாகனங்களில் செம்மண் கடத்தப்படுகிறது.

    இது குறித்து புகார் இருந்தா லும் யாரும் கண்டு கொள்வ தில்லை. ஆகவே களியக்கா விளை பகுதியில் கொடிகட்டி பறக்கும் செம்மண் கடத்தலை முடி வுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு கனிம வளங்கள் கனரக லாரிகளில் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்கு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய கனரக லாரிகளுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என கூறியிருந்த நிலையில் இரவு நேரங்களில் புளியரை சோதனை சாவடி வழியாக ஆலங்குளம் வரையில் பிரம்மாண்ட லாரிகள் மின்னல் வேகத்தில் படையெடுத்து வருகின்றன.

    இதற்கு அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக கூறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது கனிமவள லாரிகளை சிறை பிடித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவில் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு எம்.சான்ட் ஏற்றி சென்ற லாரியின் தொட்டியில் இருந்த துவாரம் வழியாக எம். சாண்ட் மணல் சாலையில் கொட்டி கொண்டே சென்றதால் அதன் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளின் கண்களை எம்.சாண்ட் மண் பதம் பார்த்தது. உடனடியாக சில சமூக ஆர்வலர்கள் அந்த கனரக லாரியை பாவூர்சத்திரம் அடுத்து உள்ள கல்லூரணி விலக்கு அருகே வைத்து சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், கேரளாவிற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதாகவும், விதிமுறைக்கு புறம்பாக கூடுதல் கனிம வளங்களை ஏற்றி செல்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
    • சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முறை வாரச்சந்தை, வணிக நிறுவனங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மீண்டும் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டினம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை களிலும், மீன் கடைகளிலும், ராமநாதபுரம் வாரச் சந்தையிலும் பாலிதீன் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

    ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றை பறிமுதல் செய்ய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாலிதீன் பைகளில் வியாபாரிகள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இது தவிர மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளில் இறைச்சி வழங்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

    சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
    • கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், பல்லடத்தில் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • நகர்ப்புற நல வாழ்வு மையம் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
    • சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங் களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி இடைய பொட்டல் தெருவில் பொது மக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 -22 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என பலர் வாழ்ந்து வருகின்றனர்.
    • பெரியாம்பட்டியில் உள்ள கோவிலில் இட்லி, தோசை, புளியோதரை சாதங்களை தினந்தோறும் காலையில் நேரத்தில் வழங்கி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு சாலைகளில் ஏராளமான ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என பலர் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆதரவற்றோர்க்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

    நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு அளிக்க திட்டமிட்டு 10-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் ஒருவர் என வருடம் முழுவதும் உணவு வழங்க முடிவு செய்து பெரியாம்பட்டியில் உள்ள கோவிலில் இட்லி, தோசை, புளியோதரை சாதங்களை தினந்தோறும் காலையில் நேரத்தில் வழங்கி வருகின்றனர்.

    • பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
    • போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமையுடன் ரம்மியமாக காட்சியளித்து வரும் இந்த மாவட்டத்தில் புளியரை பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையானது ஆரம்பமாகிறது.

    இதனால் கேரளாவில் இருக்கும் சீதோஷண நிலையை ஒன்றியதாக தென்காசி மாவட்டம் விளங்கி வருகிறது. அதுமட்டும் அல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாயும் முக்கிய அருவிகளை கொண்டதும், பிரசித்தி பெற்ற கோவில்களை கொண்ட நகரமாகவும் தென்காசி விளங்கி வருகிறது.

    தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் பலரும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்த தென்காசியை கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவித்தார்.

    தென்காசியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு காய்கறிகள், சிமெண்ட் மற்றும் ஏராளமான அத்தியாவசிய பொருட்கள் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்கள் திரும்பி வரும்போது சாதாரணமாக திரும்புவது இல்லை.

    கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் எண்ணற்ற இறைச்சி கழிவு, மருத்துவ கழிவுகளை ஏற்றி வருவதும், அதனை தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், புளியங்குடி, ஆலங்குளம், சங்கரன்கோவில், குருவன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு சில டிரைவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தமிழகத்திற்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்தின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தினாலும், அதனையும் மீறி ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதித்து விடுகின்றனர்.

    இதனால் பசுமையுடன் காட்சியளிக்கும் தென்காசி மாவட்டம் குப்பைகளின் புகலிடமாய் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பழைய இரும்பு பொருட்களை அனுப்புகிறோம் என்ற பெயரில் மர்ம கும்பல் அதனுடன் சேர்த்து நச்சுத்தன்மையுடன் விளங்கும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றி அனுப்புகின்றனர்.

    அவர்கள் அனுப்பும் பொருட்களை தென்காசி மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் தனி தனி செட்டுகளை அமைத்து தரம் பிரித்து பொருட்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்கிருந்து மீண்டும் கனிம வளங்களை ஏற்றுவதற்கு தென்காசி மாவட்டத்திற்கு நுழையும் கனரக வாகனங்களும் கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் காட்டு பகுதியில் கொட்டி செல்வதாக புகார்கள் கூறப்படுகிறது.

    சமீபத்தில் கூட ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் இருந்து பனையங்குறிச்சி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை கண்டு கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் கரும்பனூர் அருகே காட்டுப்பகுதியில் கழிவு பொருட்களை இரவு நேரங்களில் தீ இட்டு எரித்ததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கரும்பனூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கடையம் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. தென்காசி மாவட்ட மக்களின் மனங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு கேரளா கழிவுகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
    • பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள், இளநீர், மோர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். திருப்பூர் நகரத்தை பொறுத்தவரை வருடத்தில் சில நாட்கள் மழை பெய்கிறது. மற்ற நகரத்தை போல் அல்லாமல் இங்கு வெயில் அதிகம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    திருப்பூரில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், பனியன் கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் சுற்றுவட்டார நகரங்களான உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் அவதி அடைகின்றார்கள். சிலருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி தனியார் ஓட்டல்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடைத்து விற்கப்படும் பாட்டில் நீரின் விலை நிர்ணயித்ததை விட கூடுதலாக விற்கிறார்கள். தரம் அப்படி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதனால் மதிய நேரங்களில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வருவோர், வேலை காரணமாக அலையும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாகத்தால் அவதி அடைகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வழி செய்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். நீர் மோர் அருந்துவதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், ரிபோப்ளேவின் பாஸ்பரஸ், புரோட்டீன், என்சைம்கள் கிடைக்கின்றன. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ள கொழுப்பு சத்து மற்றும் கலோரி இதில் மிக மிக குறைவு. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் விட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். அதே போன்று உடல் வறட்சி போன்றவற்றால் நீரிழப்பு ஏற்படுகிறது .அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இது சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே தினமும் மோர் குடிப்பது நல்லது . எலும்புகளின் வலிமைக்கு பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.

    இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய மார்கெட் பகுதிகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் வகையில் தற்காலிக நீர் மோர் பந்தல்களை அமைக்கலாம். இதற்கு என்று பெரிதாக செலவுகள் ஓன்றும் ஆகாது. பொதுமக்களும் வெப்பத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள நீர் மற்றும் மோரை வாங்கி பருகி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

    ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி டவுண் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அந்த பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நின்ற பொதுமக்கள் யாரும் பிணத்தை தூக்க முன்வராததால் மற்ற போலீசார் முன்னிலையில் டவுன் போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவர் ஏட்டு பாரதி தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினார்.பின்பு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. யாரும் முன்வராத நிலையில் போலீசாரே பிணத்தை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றியதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    ×